Sunday, November 30, 2014

காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க)

காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க)

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். 

குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது. எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை  தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. 

இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். 

இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:


No comments:

Post a Comment

ராகு காலத்தை சுலபமாக நினைவில் வைத்து கொள்ள இந்தச் சொற்ச்சொடரை நினைவில் வைக்கவும்.

"திருச்சி ந்தையில் வெல்லமும் புளியும் விற்ற செல்வன் ஞானியானன்"

திங்கட்கிழமை = 7.30 - 9.00 AM
சனிக்கிழமை = 9.00 - 10.30 AM
வெள்ளிக்கிழமை = 10.30 - 12.00 Noon
புதன்கிழமை = 12.00 - 1.30 PM
வியாழக்கிழமை = 1.30 - 3.00 PM
செவ்வாய்க்கிழமை = 3.00 - 4.30 PM
ஞாயிறுக்கிழமை = 4.30 - 6.00 PM

இது சூரிய உதயம் 6.00 A.M என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உள்ளூர் நேரத்திக்கேற்ப மாற்றி கணக்கிடவும்.